விருதுநகர் அருகே தாய் கண் முன்னே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை...வைரலாகும் பரபரப்பு வீடியோ

விருதுநகர்: அதிமுக பிரமுகரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த மேற்கு ஒன்றிய அதிமுக மாணவர் அணி அவைத் தலைவரான சண்முகம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இன்று நேற்று இரவு தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் 6 பேர்  சண்முகம் தாய் கண் முன்னரே வீட்டு வாசலில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்ட கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனை அடுத்து கொலை செய்யப்பட்டதை அறிந்த விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்த போது கொலை செய்யப்பட்ட காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து விசாரித்த போலீசார், ஒரு கொலை வழக்கில் சண்முகத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: