டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை திருடர் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டதாக ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. ராகுல் காந்தி பேச்சு குறித்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.