மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த செந்தில்குமார்- ராஜமீனா தம்பதியின் மகள் தியாஷினி உயிரிழந்த சிறுமி ஆவர். மூன்று நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த தியாஷினிக்கு ரத்த பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுள்ளார்.