சிதம்பரம்: எஞ்சின் இல்லாத இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தவரை தலைக்கவசம் அணியவில்லை என்று போலீசார் அபராதம் விதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு கடை வீதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது எஞ்சின் இல்லாமல் வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரிடம் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறிய போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அபராதத்தை செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.