சென்னை ஓட்டேரி மற்றும் வேளச்சேரியில் நடந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஓட்டேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ்குமார்(24) என்பவர் தனியார் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தார். தனியார் பேருந்து ஓட்டுநர் பாலமுருகன்(36) என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து வேளச்சேரியில் இருசக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற செல்வராஜ்(69) என்பவர் உயிரிழந்தார். தப்பியோடிய இருசக்கர வாகன ஓட்டுனரை போக்குவரத்து புலனாய்வு போலீஸ் தேடி வருகிறது.

Related Stories: