சென்னை: கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு நகராட்சி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் பணியில் சேரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.