மேற்கு வங்க ஆளுநருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாநில அரசு நடத்திய துர்கா பூஜை விழாவில் தனக்கு உரிய நாற்காலி ஒதுக்காதது, ஜாதவ்பூர் பல்கலைக் கழக பாதுகாப்பு விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களில் முதல்வர் மம்தாவுக்கும், ஆளுநர் ஜக்தீப் தாங்கருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஜாதவ்பூர் விவகாரத்தைத் தொடர்ந்து, ஆளுநருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், எதிர்ப்பை மீறி ஆளுநருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இப்பாதுகாப்புடன் முதல் முறையாக, கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தாங்கர் பங்கேற்றார்.

Related Stories: