திரிசூலம் முனைய சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

* தி.மு.க எம்பி டி.ஆர்.பாலு கோரிக்கை ஏற்பு

* ரயில்வே அமைச்சர் பதில் கடிதம்

சென்னை: திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி கோரிக்கையை ெதாடர்ந்து, திரிசூலம் முனைய சுரங்கப்பாதை திட்டத்திற்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திமுக முதன்மை செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து, ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி அகல ரயில் பாதை திட்டம், அம்பத்தூர் புதிய ரயில் முனைய திட்டம், மீனம்பாக்கம் - திரிசூலம் - சுரங்கப்பாதை திட்டம், ஆலந்தூர் - ஏஜிஎஸ் நிதி பள்ளி அருகில் நடை மேம்பாலம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் அளித்திருந்தார்.  

இந்நிலையில், இந்த கடிதத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், லெவல் கிராசிங் எண் 22 அருகில் திரிசூலம் முனையத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும்  திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும், இந்த திட்டம்  முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிண்டிக்கும் செயின்ட் தாமஸ் மவுண்டிற்கும் இடையில் உள்ள ஆலந்தூர் ஏஜிஎஸ் நிதி பள்ளி அருகில் அமைய இருந்த பாதாள சாலை திட்டத்திற்கு பதிலாக நடை மேம்பாலம் அமைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: