×

கொடுங்கையூரில் வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற பெண் கைது: 25 கிலோ கஞ்சா, 19 சவரன் பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர், மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து கொடுங்கையூர் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி கிருஷ்ணன் தெருவில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் கஞ்சா விற்பதாக புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் சாந்தி (47) என்ற பெண் கஞ்சா வியாபாரம் செய்வது தெரிந்தது.அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்திய போலீசார் 25 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் 70 ஆயிரம் ரூபாய் மற்றும் 19 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், சாந்தி 6 மாதத்திற்கு முன் கொடுங்கையூரில் டீச்சர்ஸ் காலனி வந்து குடியேறியதும், அந்தப் பகுதியில் மெல்ல மெல்ல வியாபாரத்தை துவங்கியதும் தெரியவந்தது.

இதற்குமுன் புளியந்தோப்பு மற்றும் சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் வீடு எடுத்து கஞ்சா வியாபாரம் செய்து வந்ததும், போலீசார் தொடர்ந்து நெருக்கடி தரவே வெவ்வேறு இடங்களில் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. சாந்தியின் கணவர் சக்திவேல். இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். தற்போது இவர் உயிரோடு இல்லை. அவர்களுக்கு ஒரே மகன் மணிகண்டன் (25). இவரும் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். சாந்தி பிடிபட்ட நிலையில், மகன் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Tags : home ,Kodungaiyur ,arrest ,Hyde ,Kodungaiyur Woman , home , Kodungaiyur, Woman, arrested,cannabis
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...