பெங்களூரு: யூ டியூப் பிராங் வீடியோவுக்காக பேய் போல் வேடமிட்டு நள்ளிரவில் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை பயமுறுத்திய புள்ளிங்கோ 7 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு யஷ்வந்தபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ரயில் நிலையம் மற்றும் ரயில்வே கேட் அருகே தனியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் கார், பைக்கில் தனியாக செல்பவர்களிடம் சில வாலிபர்கள் பேய் மற்றும் பைத்தியம், சைக்கோ போன்று வேடமிட்டு அவர்களை மிரட்டி வந்துள்ளனர். இதனால் ஏராளமானவர்கள், இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லமுடியாமல் பயத்தில் நடுங்கினர். இதுகுறித்து புகார்கள் போலீசாருக்கு சென்றது. போலீசார் இச்சம்பவம் குறித்து கண்காணித்து விசாரணையில் இறங்கினர்.