புழல்: புழல் அருகே காதலன் வீட்டில் இளம்பெண் தஞ்சம் அடைந்ததால், ஆத்திரமடைந்து அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த 5 பைக்குகளை சூறையாடிய உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். புழல் சக்திவேல் நகர் 35வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தீபக் (22). ஐ.டி.ஐ முடித்துள்ளார். செங்குன்றம், பம்மதுகுளம் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பிரியா (19). பிஎஸ்சி பட்டதாரி.பிரியாவும், தீபக்கும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பிரியா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரியா சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தீபக் வீட்டுக்கு வந்துவிட்டார்.