காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று சத்துணவுடன் வழங்குவதற்காக முட்டைகள் அவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்துணவு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்தனர். அதற்கு அவர், ‘‘அனைத்து முட்டைகளையும் குப்பைத்தொட்டியில் கொட்டிவிடுங்கள். மாணவர்களுக்கு இன்று (நேற்று) வழங்க வேண்டிய முட்டைகளை நாளை (இன்று) வழங்கிக் கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள், அவற்றை மொத்தமாக குப்பைத்தொட்டியில் கொட்டினர். இந்த விபரம் தெரிந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.