மதுரை: வேலையே இல்லாத சில பேர், தமிழகத்தில் ஆளுமைக்கு வெற்றிடம் உள்ளது என்று கூறியுள்ளதாக வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் தொடர் ஜோதி பயணம், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கியது. இந்த நடைபயணத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அவரது தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வேலையே இல்லாத சில பேர் தமிழகத்தில் ஆளுமைக்கு வெற்றிடம் உள்ளது என்று கூறுவதாகவும், தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை.