மும்பை: அரசியல் சட்டப்பிரிவு 356-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை மராட்டியத்தில் அமைக்க ஆளுநர் பரிந்துரை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமது அறிக்கையை ஆளுநர் பகத்சிங் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அரசியல் சட்டப்படி மராட்டிய மாநிலத்தில் ஆட்சி நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் அறிக்கையில் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.