ஆந்திர மாநிலம்: ஆந்திராவில் அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி அறிமுகம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.