பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மலை கிராமத்தில் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க வந்த கும்கி பாரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மதம்பிடிப்பதற்கான வாய்ப்பு இருந்ததால் கும்கி பாரியை டாப்சிலிப் முகாமுக்கு வனத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். கும்கி யானை பாரிக்கு பதிலாக ராஜூவரதன் என்ற கும்கி யானையை காட்டு யானையை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.