பெங்களூரு: தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து மீண்டும் காற்று வீச தொடங்க உள்ளதால் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. புல் புல் காரணமாக காற்றின் திசை மாறி மழை குறைந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.