லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் அவரது உடல் நிலை கவலைக்கிடமாகி வருகின்றது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்(69). ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும், உடல்நிலை சரியாகவில்லை. இதனால், அவரை வெளிநாடு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நவாஸ் ஷெரீப் பெயர், வெளிநாடு செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே, அவரது பெயரை நீக்கும்படி நவாஸ் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.