மதுரை: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர், பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் முறையிடப்பட்டது. எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதில், மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளான ராமர் உள்பட 13 பேர், கடந்த 9ம் தேதி மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.