ஜெர்மனி வாலிபருடன் கோவை பெண் திருமணம்

கோவை: ஜெர்மனி வாலிபருக்கும், கோவை பன்னிமடையை சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் கலாசாரத்தின்படி திருமணம் நடந்தது. கோவை துடியலூர் அருகே பன்னிமடையை சேர்ந்த சுப்ரமணியம், கலாவதி ஆகியோரின் மகள் வித்யபிரபா(28). கம்ப்யூட்டர் இன்ஜினியர். ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  அதே கம்பெனியில் வேலை பார்த்த ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் ஷீல்டஸ் (29) என்பவருடன் வித்யபிரபாவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, இரு வீட்டாரிடமும் பேசி சம்மதம் பெற்றனர்.

 இதைத்தொடர்ந்து, மைக்கேல் ஷீல்டஸ், வித்யபிரபாவுக்கு கோவை வெள்ளக்கிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாசாரப்படி நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. ஜெர்மனி வாலிபர் வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். மைக்கேல் ஷீல்டஸ் குடும்பத்தினர் வரமுடியாததால், வித்யபிரபாவின் தாய் மாமா கனகராஜ், பார்வதி ஆகியோர் மணமகனின் பெற்றோராக இருந்து சடங்குகளை செய்தனர். இதில், பாதபூஜை, மலர் வாழ்த்துதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டது. இந்த திருமணத்தில் ஜெர்மனியில் இருந்து வந்திருந்த மைக்கேல் ஷீல்டஸின் நண்பர்களும் வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Related Stories: