கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 46 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளது. இதில் தலையிட்டு நிலுவைத் தொகையை விரைந்து வழங்கும்படி இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், பல ஆயிரம் கோடி கடன் சுமையால் சிக்கி தவிக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்க முடியாமல் திணறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பெங்கால் சர்க்கிள் மேலாளர் ராமகாந்த் சர்மா வெளியிட்ட அறிக்கையில், `மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு அரசு துறைகள் பிஎஸ்என்எல்.க்கு செலுத்த வேண்டிய மொத்த கடன் 46 கோடியாக உள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், இதனை விரைந்து செலுத்தும்படி உள்துறை செயலருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.