புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் நிதிநிலை குழுவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், கடந்த 1991-96ம் ஆண்டுகளில் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2014 செப்டம்பர் முதல் 2019 மே வரை நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம் பெற்றிருந்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஆகஸ்ட் மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.