புதுடெல்லி: ‘‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோருவதா, வேண்டாமா என வரும் 17ம் தேதி நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’’ என முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜிலானி தெரிவித்தார். அயோத்தி வழக்கில் கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்கும்படியும் உத்தரவிட்டது.