×

ஜேப்பியார் கல்விக் குழுமம் 350 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு: ரூ.5 கோடி பணம் மற்றும் ரூ.3 கோடி நகைகள் சிக்கின

சென்னை: ஜேப்பியார் கல்வி குழுமம் ரூ.350 கோடி வருவாயை காட்டாதது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேப்பியார் கல்வி குழுமத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் ரூ.5 கோடி பணம் மற்றும் ரூ.3 கோடி நகைகள் சிக்கியுள்ளன. அ.தி.மு.க.,வை சேர்ந்த ஜே.பங்குராஜ் என்ற ஜேப்பியார் 1988ம் ஆண்டு சென்னை - மாமல்லபுரம் சாலையில் சத்தியபாமா இன்ஜி னியரிங் கல்லுாரியை துவங்கினார். இதன்பின் ஜேப்பியார் பனிமலர் பெயர்களில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லுாரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக, வருமான வரி ஏய்ப்பு செய்வதாக ஜேப்பியார் கல்வி குழுமத்தின் மீது புகார் எழுந்தது. அதையடுத்து சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் இன்ஜினியரிங் கல்லுாரி அதன் இயக்குனர்கள் வீடு உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஜேப்பியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சூளைமேடு பாலிடெக்கனிக், பொறியியல் கல்லூரி, அண்ணாநகர் குழும தலைவர் வீட்டில் சோதனை நடந்தது.

இதுவரை நடத்தபட்ட சோதனையில் ஜேப்பியார் கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களில் 350 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 32 இடங்களில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது. ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடம் அதிக அளவில் நன்கொடை பெற்று, குறைந்த அளவு கணக்கில் காட்டப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Japiar Education Group, Tax Evasion, Income Tax Check
× RELATED கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான...