சென்னை: தேனாம்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு கேதார்நாத் (28) என்பவர், சாலையில் நடந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர், திடீரென கேதார்நாத்தை வழிமறித்து சராரியாக தாக்கி, அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து கேதார்நாத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.