புதுடெல்லி: மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு கடந்த அக்டோபரில் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் குறைந்த நிலையில், சிலர் மியூச்சுவல் பண்ட்களிலும் ஆர்வம் காட்ட தொடங்கினர். கடந்த அக்டோபர் மாதத்தில் பங்குச்சந்தையுடன் தொடர்புடைய மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ6,026 கோடி. இதில் மாத இறுதியில் ரூ11 கோடி வெளியேற்றப்பட்டது. இதன்படி நிகர முதலீடு ரூ6,015 கோடி.