டெஹ்ரான்: உலகின் அதிக எண்ணெய் வளம் கொண்ட 4வது நாடாகவும், எரிவாயு ஏற்றுமதியில் 2வது நாடாகாவும் ஈரான் திகழ்கிறது. ஆனால், சமீபத்தில், ஈரானுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. மேலும், அந்நாடு தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்வதாக கூறி, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது.