புதுடெல்லி: விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர 1 லட்சம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரத்து குறைவு காரணமாக, வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக கடுமையாக உயர்ந்துள்ளது. விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய நுகர்வோர் அமைச்சக அதிகாரிகள் கூட்டம் நேற்று நடந்தது.