திருப்போரூர்: மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக, மாவட்ட மாணவிகள் அணியை தேர்வு செய்வதற்காக, பள்ளிகளுக்கு
இடையிலான த்ரோபால் போட்டி, மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில், கேளம்பாக்கம், கோவளம், கல்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள 36 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.