17 நாளுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் இறங்கியது

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மிதமான மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 6,205 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 7,890  கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், தொடர்ந்து 17 நாட்களாக 120 அடியாக நீடித்து வந்த நீர்மட்டம், நேற்று காலை 119.50 கனஅடியாக குறைந்தது. நீர் இருப்பு 92.67 டிஎம்சி.

Related Stories: