மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாத விநியோக திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் நேற்று ெதாடங்கி வைத்தார். பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த அக். 27ம் தேதி தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று முதல், மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு விநியோகிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, காலை 10.25 மணிக்கு இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பக்தர்களுக்கு லட்டு வழங்கி தொடங்கி வைத்தார். இதற்கென மதுரை கோயிலில் தயாரான லட்டு ஏற்கனவே சென்னை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வருடன், அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், செல்லூர் ராஜூ, உதயகுமார் கலந்து கொண்டனர்.