புதுடெல்லி: விருப்ப ஓய்வு திட்டத்தில் (விஆர்எஸ்) 60,000க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர்.மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் நஷ்டத்தால் தள்ளாடுகின்றன. சம்பளச்சுமையை குறைக்கும் வகையில் விஆர்எஸ் திட்டத்தையும் கடந்த 4ம் தேதி அறிவித்தது. இதை ஏற்பவர்களுக்கு ஆண்டுக்கு 35 நாள் சம்பளம் என பணியாற்றிய மொத்த ஆண்டுகளுக்கு கணக்கிட்டு கருணைத்தொகை வழங்கப்படும். ஓய்வு வயது வரை ஆண்டுக்கு 25 நாள் சம்பளம் வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். இதுபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.