தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த தினேஷ்குமார் (16), ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர், நேற்று தேர்வு எழுதிவிட்டு, தனது நண்பர்கள் 15 பேருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சென்று, கடற்கரைக்கு சென்றார். அங்கு, கடலில் மாணவர்கள் குளித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய தினேஷ்குமார் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.