பெங்களூரு: கர்நாடகாவில் டிசம்பர் 5ம் தேதி நடக்க உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள், கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் டிச.5ம் தேதி காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.