திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சுப்புக் காளை என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2017ல் நடந்த சொத்துத் தகராறில் சுப்புக் காளை என்பவர் தம்பி மகன்கள் இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வீரமணி, அன்புசுந்தரம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.