சேலம்: சேலம் கந்தன்பட்டியில் லாரி டயருக்கு காற்று பிடித்தபோது, அதிக அழுத்தம் காரணமாக ஏர்- கம்ப்ரசர் வெடித்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தையின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கந்தப்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் பட்டறையில் இன்று காலை கம்ப்ரசர் சிலிண்டர் மூலம் கண்டெய்னர் வாகனத்திற்கு காற்று பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிலிண்டரில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது. இதில் சிலிண்டரின் பாகங்கள் கண்டெய்னர் மீதும், அருகிலுள்ள ஓட்டு வீட்டின் மேற்கூரையை துளைத்து கொண்டும் உள்ளே விழுந்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த மௌலீஸ்வரன் என்ற சிறுவனின் கை துண்டானது.