பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காதி மண்டலத்தில் இந்திய ராணுவ துருப்புகள் முகாம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் எறிகணைகளை வீசியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலால் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவம்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்
- பாகிஸ்தான் இராணுவம்
- இந்திய ராணுவ வீரர் இராணுவ சிப்பாய்
- பாக்கிஸ்தான்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- யுத்த நிறுத்த
- பூஞ்ச்