சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எட்பபாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த அக். 27ம் தேதி தீபாவளி முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென லட்டு விநியோகிப்பது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அறநிலையத்துறை சார்பில் இன்று முதல் மீனாட்சியம்மன் கோயிலில் இலவசமாக லட்டு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.