நாகர்கோவில் : மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாகர்கோவிலில் போராட்டம் நடத்திய காங்கிரஸ்காரர்கள் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கோழிகள், மாடுகள், சட்டி பானைகளுடன் காங்கிரஸ்காரர்கள் போராட்டம் நடத்தினர். குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.