மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40,676 என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தையின் தொடக்க நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 40,676 புள்ளிகளை எட்டியது. புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் தற்போது 22 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 40,492 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.