கிங் எட்வர்ட் பாயிண்ட்: தெற்கு சாண்ட்விச் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலின் தென்பகுதியில் அமைந்த தெற்கு சாண்ட்விச் தீவின் கிழக்கில் இன்று அதிகாலை 2.22 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.