மர்ம காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி

புழல்: செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் இளவரசு. செங்குன்றத்தில் உள்ள தனியார் மால் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் கவிதா (21). பட்டதாரி. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு செங்குன்றத்தை அடுத்த எம்ஏ நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடந்த வெள்ளி அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

Related Stories: