டெங்கு விழிப்புணர்வு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை பருகினர். சென்னை மாநகராட்சி 127வது வார்டுக்கு உட்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று  முன்தினம் மண்டல நல அலுவலர் சுகன்யா, துப்பரவு அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை பருகினர்.

Related Stories: