சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, 310 சிறப்பு இணைப்பு பஸ்களை இயக்குவதாக எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், இன்று (24.10.2019) முதல் 26ம் தேதி வரை 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு), கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்படும்.