சித்திரை ஆட்ட திருநாள் பூஜை சபரிமலை கோயில் நடை 26ம்தேதி திறப்பு

திருவனந்தபுரம்: சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 26ம் தேதி திறக்கப்படுகிறது.ஐப்பசி   மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த 17ம் தேதி மாலை  திறக்கப்பட்டது. மறுநாள்  முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. 5 நாள்  பூஜைகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கோயில் நடை   சாத்தப்பட்டது. இந்த  நிலையில் சித்திரை ஆட்ட  திருநாளை முன்னிட்டு வரும் 26ம் தேதி மாலை 5  மணிக்கு மீண்டும் கோயில் நடை  திறக்கப்படுகிறது. மறுநாள் 27ம் தேதி சிறப்பு   பூஜைகள் நடக்கின்றன. அதன் பிறகு இரவு 10 மணிக்கு கோயில் நடை   சாத்தப்படுகிறது. மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர்  16ம் தேதி மாலை நடை  திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: