ஜார்கண்ட் மாநிலத்தில் காங். எம்எல்ஏக்கள் உட்பட 4 பேர் பாஜ.வுக்கு தாவல்

ராஞ்சி:  ஜார்கண்டில் 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் உட்பட 4 பேர் ஆளும் பாஜ.வில் இணைந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில், பாஜ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ரகுபர்தாஸ் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்கட்சிகளை சேர்ந்த 4 எம்எல்ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் நேற்று இணைந்தனர்.

காங்கிரசை சேர்ந்த சுக்தியோ பாகத், மனோஜ் யாதவ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த குணால் சாரங்கி, சுயேச்சை எம்எல்ஏ பானு பிரதாப் சாகி ஆகியோர் தங்கள் கட்சிகளில் இருந்து விலகினர். பின்னர், இவர்கள் முதல்வர் ரகுபர் தாஸ்   முன்னிலையில் பாஜ.வில் தங்களை இணைத்து கொண்டனர். ஜார்கண்ட் மாநில காவல்துறை முன்னாள் இயக்குனர் ஜெனரல்  டிகே பாண்டேவும் பாஜ.வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: