அத்தியூர் வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ8 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரிஷிவந்தியம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரசந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம்  ரிஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுச்  சந்தை நடைபெற்று வருகிறது. ரிஷிவந்தியம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆடு, மாடு, கோழிகளை இந்த சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆடு, மாடுகளை வாங்கிச் செல்கிறார்கள்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வார சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தமிழத்தின் பல பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர். ஒரு ஆடு அதிக பட்சமாக ரூ4 ஆயிரம் வரை விலை போனது. நேற்று ஒரே நாளில் 2500 ஆடுகள் ரூ.8 கோடி அளவிற்கு விற்பனை ஆனதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: