நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரூ.10 லட்சம் ரொக்கம், நகைகளைத் திருடியவர் 48 மணி நேரத்தில் கைது

நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரூ.10 லட்சம் ரொக்கம், நகைகளைத் திருடியவர் 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. முத்துக்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மற்றும் 9 சவரன் நகைகளை ராஜீவ் கண்ணன் என்பவர் திருடியதாக புகார் எழுந்தது. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்திய நாகை போலீஸ் 48 மணி நேரத்தில் ராஜீவ்கண்ணனை கைது செய்தனர்.

Related Stories: