சென்னையில் அக்.24 முதல் அக்.26 வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் 310 இணைப்பு நகரப் பேருந்துகள் இயக்கப்படும் : மாநகரப் போக்குவரத்து கழகம்

சென்னை : தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 24 மணி நேரமும் இணைப்பு நகரப் பேருந்துகள்  இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ள 310 இணைப்பு நகரப் பேருந்துகள் சென்னையில் அக்.24 முதல் அக்.26 வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது பின்வருமாறு,தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

2. தாம்பரம் புதிய பேருந்து நிலையம்

3. பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்

4. புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்

5. கே.கே.நகர் பேருந்து நிலையம்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட ஐந்து பேருந்து நிலையங்களில் மாநகரப் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள ஐந்து பேருந்து நிலையங்களுக்கு எளிதாகச் சென்று வெளிமாவட்ட நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 24.10.2019 முதல் 26.10.2019 ஆகிய 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: