தீபாவளியையொட்டி நாளை முதல் 24 மணி நேரமும் இயக்கப்படும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபாவளியையொட்டி நாளை முதல் 24 மணி நேரமும் இயக்கப்படும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை முதல் அக்.26 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகரில் இருந்து தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

Related Stories: